நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகள்!

தூத்துக்குடி வண்ணார் 2 ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமிக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி தனியாக தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அந்த தாயின் 17 வயதுடைய மூத்த மகளுக்கு பல்வேறு வாலிபர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மூத்த மகள் தனது ஆண் நண்பர்களான சங்கர், தங்கம், கோடாரி உள்ளிட்டோருடன் இணைந்து தனது தாயின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாயை கொலை செய்தது அவரது மூத்த மகள் என்பது தெரிய வந்ததையடுத்து அவரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *