சீனாவில் மருத்துவம் பயிலும் 23 ஆயிரம் மாணவர்களின் கல்வி கேள்விக் குறி!
சீனாவில் அண்மைக் காலமாகக் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொற்றுப் பரவல் காரணமாக சீனாவில் மருத்துவம் பயின்று வரும் 23, 000 இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்று கொரோனாத் தொற்றுப்பரவல் காரணமாக அவர்களது நேரடிக் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நேரடி கல்வியைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அம்மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.