இந்தியாவில் ஒரே நாளில் 86,432 பேருக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 69 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 86,432 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,23,179 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,089 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 69,561ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 70,072 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 31,07,223 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,46,395 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*குணமடைந்தோர் விகிதம் 77.15% ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.74% ஆக அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மராட்டியம் : சிகிச்சை பெறுவோர் :2,11,325 ; குணமடைந்தோர் :6,25,773; இறப்பு :25,964

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :51,633; குணமடைந்தோர் :  3,92,507; இறப்பு : 7,687

டெல்லி : சிகிச்சை பெறுவோர் :18,842 ; குணமடைந்தோர் :  1,61,865; இறப்பு : 4513

கேரளா : சிகிச்சை பெறுவோர் :21,334 ; குணமடைந்தோர் :60,444; இறப்பு : 326

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :  99,120 ; குணமடைந்தோர் :2,74,196; இறப்பு :  6,170

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :1,02,067 ; குணமடைந்தோர் : 3,70,163; இறப்பு : 4,276

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *