கப்ராலை கடுமையாக எதிர்த்த ரணில் மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி!

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அரசியல் பேசியதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ரணிலிடம் மன்னிப்பு கோரினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய மாநாட்டில்  மத்திய வங்கி ஆளுநர் பொருளாதார நெருக்கடிகளிற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என தெரிவித்தார்.
இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த ரணில்விக்கிரமசிங்க இது அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்றார்.
இதற்காக ரணில்விக்கிரமசிங்கவிடம்  ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *