ஜப்பானை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது!

ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நேற்று ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்திருந்தது. அந்த நிலநடுக்கத்தால் ஃபுக்குஷிமாவில் உள்ள ஒரு நகரில் கட்டடங்கள் சேதமடைந்தது.

இந்நிலையில் இந்தியாவின் லடாக் பகுதியிலும் நேற்று இரவு 7.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் அது சில விநாடிகள் வரை நீடித்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *