என்னை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசி முறையாக கூட இருக்கலாம்?

உக்ரைன் நாடு மீது ரஷ்யா கடந்த 24ஆம் திகதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கின.

அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷ்ய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *