கொடுக்கல் வாங்கல் மோசடி பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியின் மருகனுக்கு தொடர்பு!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விலை மனு கோராமல் பாதுகாப்பு அமைச்சுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆயிரத்து 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத தொடர்பு சாதன கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் ஒருவரும், பிரபல அரசியல்வாதி ஒருவரின் மருமகனும் இருப்பதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் கண்டறிந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு இந்த கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அவை பாதுகாப்பு அமைச்சில் பயன்படுத்தப்படாமல், காலம் கடந்து குவித்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விலை மனுக்கள் கோரப்படாமல் இந்த கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதியில் 80 வீதமான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக அவசரமாக இந்த தொடர்பு சாதன கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை தளபதிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் பிரதான அதிகாரிகளிடம் விடயங்கள் கேட்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த மோசடியான கொடுக்கல், வாங்கல் தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சு, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *