மனைவியுடன் இருந்த காதலன் கணவரால் தீவைப்பு காதலன் பலி மனைவி படுகாயம்!
பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தில் நபரொருவரினால் முன்னெடுக்கப்பட்ட தீவைப்புச் சம்பவத்தில் 36 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிபிட்டிய, பனாமுரே பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவர் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளாா்.
உயிரிழந்த நபர் தனது காதலியுடன் இருந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் கணவர் இவ்வாறு பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளாா்.
இந்த தீ வைப்புச் சம்பவத்தில் காயங்களுக்குள்ளான 38 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் நான்கு குழந்தைகளின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.