விமானத்தில் பாம்பு திசை மாறியது பயணம்!
மலேசியாவின் கோலாலம்பூர் மாநிலத்திலிருந்து சபா மாநிலத்தின் டாவாவுக்குச் (Tawau) செல்லவிருந்த விமானம் ஒன்று திசை திருப்பப்பட்டது.
AirAsia நிறுவனத்தின் அந்த விமானத்தில் உடைமைகள் வைக்கப்படும் மேற்பகுதியில் பாம்பு ஒன்று இருந்ததே அதற்குக் காரணம்.
அதனைத் தெரிந்துகொண்ட விமானி, விமானத்தை சரவாக் மாநிலத்தின் குச்சிங்கில் தரையிறக்கினார்.
விமானத்தில் புகைமூட்டுவதற்கு ஏதுவாக அதன் பயணம் திசைமாற்றப்பட்டதாக AirAsia நிறுவனம் விளக்கியது.
விமானத்தில் இருந்த பாம்பின் நிழலைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
விமானத்தில் பாம்பு இருப்பது மிக அரிய சம்பவம் என்றும் அது எந்த நிறுவனத்தின் விமானத்துக்கும் ஏற்படலாம் என்றும் AirAsia சுட்டியது.