EPF,ETF நிதியத்தில் வரி அறவிடும் யோசனை?

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் யோசனையை இறைவரி ஆணையாளர் முன்வைத்திருந்த போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனை நிராகரித்ததாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள நிதியானது முதலீடு மூலம் பெறப்படும் வருமானம் என கருதப்படுவதால் அதற்கு வரி விதிக்க வேண்டும் என இறைவரி ஆணையாளர் இதற்கு முன்னர் கோரியிருந்தார்.

அது தவறான நிலைப்பாடாகும் என கூறி, குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

குறித்த வரி அறவிடப்படும் செயற்பாட்டுக்கு தமது அமைச்சும் எதிர்ப்பு வெளியிடுவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவ்வாறு வரி அறவிடப்படுமாயின் பெருந்தோட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *