கள்ளக் காதலை கைவிட மறுத்த கணவனை கொலை செய்த மனைவி!

தென்காசி மாவட்டம் திருமலாபுரம் சேர்ந்தவர் முருகன் இவருக்கு திருமணமாகி நாச்சியார் என்ற மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே அந்த பெண்ணின் வீட்டிற்கு முருகன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனை அறிந்த நாச்சியார் அந்த தொடர்பை கைவிடுமாறு கணவனை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், முருகன் அதனை கண்டுகொள்ளாமல் இந்த பெண்ணுடனான தடவை தொடர்ந்து வந்துள்ளார்.

இனி லகி இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மது போதையில் இருந்த முருகன் நாச்சியாரை தலைவராக பேசவே ஆத்திரமடைந்த அவர் சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை அவர் மீது வீசி அங்கு கிடந்த கம்பால் முருகனை தாக்கியுள்ளார்.

முருகனின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறொரு பெண்ணுடன் தொடர்பு கைவிட மறுத்ததால் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *