சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதி ஆகும் தினங்கள் நீடிப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்துக்கமைய போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் “2021 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிலிருந்து 2022 மார்ச் மாதம் 31 ஆம் திகதி இறுதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்தரங்களினதும் செல்லுப்படியாகும் காலம் காலாவதியான தினத்திலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிகொள்ளும் சேவையினூடாக, நாளொன்றை ஒதுக்கிகொள்ளும்போது குறைந்தப்பட்சம் 13 நாட்களுக்கு பின்னரே தினமொன்று வழங்கப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *