214 பணியாளர், பயணிகளுக்கு கொரோனா துறைமுகத்தில் 5 கப்பல்கள் முடக்கம்!

214 பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு கொரோனா உறுதியானதால் சாண்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார ஒழுங்குமுறை அதிகாரி அன்விசா தெரிவித்தார். சுவிஸ் – இத்தாலிய இடையே இயக்கப்படும் கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் தலா 3,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாண்டோஸுக்கு சென்று கொண்டிருந்தன. சாண்டோஸுக்கு சென்ற கப்பலில் இருந்த பணியாளர்கள் 65 பேருக்கும், பயணிகள் 25 பேருக்கும்  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் ரியோவிற்கு செல்லவிருந்த கப்பலில் இருந்த பணியாளர்கள் 25 பேருக்கும் 8 பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால், மேற்கண்ட இரண்டு கப்பல்களுடன் சேர்த்து ெமாத்தம் 5 கப்பல்களில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், 5 கப்பல்களும் வரும் 21ம் தேதி வரை பிரேசில் நாட்டின் எல்லையில் உள்ள சாண்டோஸ் துறைமுகத்தில் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரேசிலியாவின் சுகாதார ஒழுங்குமுறை அதிகாரி அன்விசா தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *