ஊழல் மோசடியால் அரசாங்கம் IMF செல்ல தயங்குகிறது!

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்க செல்வதில்லை. இவர்களுக்கு உதவி வழங்க எவரும் தயாரும் இல்லை. காரணம் ஊழல் மோசடி அராஜகம் ஆதிக்கம் இவை போன்ற பல செயல்பாடுகள் மலிந்த அரசாங்கம் ஒன்றுக்கு எவரும் உதவி செய்ய முன் வருவதில்லை. என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உதவி வழங்குவோரால் அந்நாட்டின் மனித உரிமை ஜனநாயகம் சட்டம் சமாதானம் பொலீஸ் நீதிமன்றம் போன்ற நடவடிக்கைகள் எவ்வாறு இடம் பெறுகின்றன எனப்பார்ப்பர்.

என் 5 வருடத்துக்கும் குறைவான பதவிக் காலத்தில் நான் IMF உடன் நெருக்கமாக பணியாற்றினேன் எனக்கு இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *