வீட்டு வேலைக்கு வந்தவரை பிரபல நடிகையாகிய நடிகர்!

தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல இளம் மாடர்ன் நடிகைகள் படங்களில் தங்களால் முடிந்த அளவிற்கு கிளாமருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து நடித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாகவும் இன்று இத்தனை நடிகைகள் வந்த போதிலும் இவர்களுக்கு எல்லாம் மேலாக பல ரசிகர்களின் மனதில் தனக்கென நீங்காத இடத்தையும் பலரின் கனவு கன்னியாகவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சில்க் ஸ்மிதா. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் காரணம் நடித்த படங்கள் குறைந்த அளவிலே இருந்த போதிலும் நடித்த படங்களில் எல்லாம் தனது வசீகரமான தோற்றம் அழகான பேச்சு காந்தம் போல் இழுக்கும் கண் இவைகளால் வெகுவாக மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

அந்த வகையில் இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சில்க் ஸ்மிதா இளம் வயதிலேயே எதிர்பாராத விதமாக தனது உயிரை மாயித்து கொண்டார். இவ்வாறு இருக்கையில் இவர் முதன் முதலில் வண்டி சக்கரம் எனும் படத்தின் மூலமாக தான் திரையுலகிற்கு அறிமுகமானர் மேலும் இவரை அறிமுகபடுத்தியது கூட மறைந்த பிரபல முன்னணி நடிகர் வினு சக்கரவர்த்தி தான். இவர் வில்லன் , காமெடி, குணச்சித்திரம் என கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்படி இருக்கையில் சில்க் ஸ்மிதாவை எப்படி சினிமாவில் அறிமுகபடுத்தியது குறித்து அப்போதே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் நான் அப்போது நடித்து கொண்டிருந்த படம் ஒன்றில் படதயாரிப்பாளர் ஒரு கிளாமர் பாடலுக்கு நடனமாட பல முன்னணி நடிகைகளின் பெயர்களை தேர்வில் வைத்து இருந்தார். இருப்பினும் எனக்கு அதில் உடன்பாடில்லை புதுமுகமாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய எண்ணினேன்.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் எதற்சியாயாக மாவரைக்கும் மிசின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் உடனே அவள் என்னை பார்த்த பார்வையில் அவளது கண்கள் என்னை காந்தம் போல் இழுத்தது. உடனே அவரிடம் பேசினேன் அவரது பெயர் கேட்டதற்கு விஜயமாலா எனவும் தான் ஆந்திராவை சேர்ந்தவர் எனவும் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்து 17-நாட்களே ஆகிறது எனவும் கூறினார். நான் உடனே நடிக்க ஆசையா என கேட்டேன் அதற்கு அவர் நான் எங்கள் ஊர் விழாக்களில் நடனமாடி இருக்கேன் எனவும் எனக்கு நடிக்க ஆசை இருக்கு எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து அவருக்கு எப்படி பேசுவது நடிப்பது என அனைத்தையும் கற்று கொடுத்தேன் அவரும் அதை விரைவாக கற்று கொண்டார். இறுதியில் அவரை இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்கள் முன்னிலையில் காண்பித்தவுடன் அவர்கள் வியந்து இவர் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது நடிப்பால் கலக்க போகிறார் என கூறினார்கள். அதேபோல் இவரும் தன் வசீகரமான நடிப்பால் சினிமாவில் ஒரு வலம் வந்தார். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை மேலும் அவரது பெற்றோர் அவர் உடன் இல்லாததே இவரது இந்த நிலைக்கு காரணம் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *