கடலில்12 மணி நேரம் நீந்தி உயிர்பிழைத்த அமைச்சர்!

ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த அமைச்சரொருவர் 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர்பிழைத்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செர்ஜி கெல்லே என்ற அமைச்சரே இவ்வாறு கடலில் நீந்தி உயிர்பிழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில்,  64 பேர் உயிரிழந்ததுடன் மேலும், 20க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட சென்ற போதே குறித்த  அமைச்சர் பயணித்த செர்ஜி கெல்லே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹெலிகொப்டரின் இருக்கையைப் படகு போல பயன்படுத்தி கடலில் நீந்தி அவர் கரையை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர், தான் மரணமடையும் நேரம் இன்னும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *