பிரபல பொலிவுட் நடிகை கரீனா கபூரின் வீட்டிற்கு சீல் வைப்பு!
பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரோ ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனிருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல கேளிக்கை கொண்டாட்டங்களில் பங்கேற்ற பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய புகாரில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.