காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய காதலன்!

13 வயது மகளை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

ராதா கிருஷ்ணனுக்கு மூன்று திருமணம் ஆகியும் குழந்தையில்லாத நிலையில் நான்காவதாக பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமேஸ்வரி தனது மூன்று மகள்களில் 13 வயது மகளுடன் ராதா கிருஷ்ணனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து 13 வயது சிறுமிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணியும் கள்ளக்காதலி பரமேஸ்வரியும் சேர்ந்து திருமணாம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையே அச்சிறுமியை ராதா கிருஷ்ணன் வற்புத்தி உறவு கொண்டதால் அவர் 5 மாத கர்ப்பமாக உள்ளார். 

இதனை அறிந்த மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *