பாம்புக்கு பயந்துவீட்டை தீயிட்டு கொளுத்திய உரிமையாளர்!
அமெரிக்காவில் பாம்புத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக 14கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை உரிமையாளர் ஒருவர் தீ வைத்து கொளுத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்படி ,அந்த வீடு வாஷிங்டன் டிசி அருகே Poolesville பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் அடிக்கடி பாம்புகள் அழையா விருந்தாளியாய் வந்து செல்வது வழக்கம்.
மேலும் ,இந்நிலையில் பாம்பு நடமாட்டத்தை தடுக்கும் வகையில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொந்த வீட்டையே தீ வைத்து கொளுத்தியுள்ளார்.