பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு செல்லத் தடை!
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் திவ்யா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன் கல்கி அணையிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.