கல்லறையில் இருந்து வெளியே வந்த விரல்கள் நடந்து சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
லண்டனில் நபர் ஒருவர் காட்டில் நடந்து செல்லும் போது கல்லறையில் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை போல இருப்பதை கண்டு பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து டெய்லி ஸ்டார் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில் பயத்தில் உறைந்து போன அந்த நபரால், தனது கால்களை நகர்த்த கூட முடியவில்லை.
ஆனால் பிறகு விசாரணை செய்ததில் தான் உண்மை வெளிவந்துள்ளது. உண்மையில், இறந்த மனிதனின் விரல்கள் என்று அவர் நினைத்தது விரல்கள் இல்லை.
கல்லறையிலிருந்து வெளியே வந்தது விரல்கள் போல் தோன்றும் பவள செடி.
அவை இறந்த மனிதனின் விரல்கள் போலவே தோற்றம் கொண்டது என்று தெரிய வந்துள்ளது