இலங்கையில் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!
வழிபாட்டுத் தலங்கள் உட்பட மற்ற இடங்களில் மக்கள் கூடுவதால் கொரோனா கொத்தணிகள் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்டார்.
மேலும் ,20 – 30 வயதுக்கு இடைப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.