14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த 65 வயது தாத்தா கைது!
14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதவான் ஆர். ராமமூர்த்தி முன்னிலையில் நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரான திருமணம் முடித்த 65 வயதான அந்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பரிசோதனைக்காக, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.