குழந்தை வயதான தோற்றத்தில் பிறந்ததால் அதிர்ச்சியில் பெற்றோர்!

தென்னாப்பிரிக்காவில் மிகவும் வயதான தோற்றத்துடன் பிறந்த குழந்தையின் முகம் புகைப்படமாக வெளியாக, அந்த பிஞ்சு குழந்தை தற்போது அப்பகுதியில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தில் 20 வயது கர்ப்பிணிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் மிக விரைவிலேயே அந்த நெஞ்சை உலுக்கும் தகவலும் வெளியானது.

பிறந்த குழந்தையானது progeria என்ற அரிய உடல் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அந்த தாயாரிடம் கூறியுள்ளனர். மிக மிக அரிதான நிலை இதுவென கூறும் மருத்துவர்கள், குழந்தையின் உடலில் தொடர்ந்து மாறுதல் ஏற்பட்டு வரும் எனவும், முதல் இரு ஆண்டுகளில் அதன் தோற்றம் மிக விரைவாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தை தொடர்பான தகவல் தற்போது கிராமத்தில் புகைப்படமாக வெளியாக, பலர் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். குறித்த தாயாருக்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்கவே, அவர்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த தாயார் குடியிருப்பிலேயே பிள்ளை பெற்றுள்ளார். குழந்தையின் முகம் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம், அச்சத்தில் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த பின்னர். குழந்தையானது progeria என்ற அரிய உடல் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அந்த தாயாரிடம் கூறியுள்ளனர்.

குழந்தை தொடர்பில் அதன் பாட்டி தெரிவிக்கையில், பிள்ளை பிறந்ததும் அழவே இல்லை எனவும், விலா எலும்புகள் வழியாக சுவாசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாவது வலியை தருவதாக கூறும் அவர், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கண்கலங்கியுள்ளார்.. progeria என்ற அரிய உடல் நிலையுடன் உலகம் முழுவதும் 131 பேர்கள் வாழ்ந்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *