பாம்பின் விஷத்தில் இருந்து கொரோனா மருந்து தயாரிப்பு!

பாம்பின்  வி‌ஷத்தில் இருந்து கொரோனாவுக்கு எதிராக மருந்தை உருவாக்கும் பணியில் பிரேஸில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு வகை பாம்பின் வி‌ஷத்தில் உள்ள மூலக்கூறுகளைக் கொண்டு   குரங்குகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், குரங்கினது செல்களில் கொரோனா வைரஸின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாம்பு வி‌ஷத்தின் இந்த மூலக்கூறு கொரோனா வைரசில் இருந்து மிக முக்கியமான புரதத்தை தடுக்கிறது என்று சாவ்பாலோ பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வின் ஆராய்ச்சியாளருமான ரபேல் கைடோ தெரிவித்தார்.

முதல்கட்ட ஆய்வுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் அடுத்ததாக மூலக்கூறின் வெவ்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீடு செய்து வருவதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *