வேடுவ சமூகத்தில் பலருக்கு கொரோனா!
வேடுவ தலைவர் உரு வாரிகே வண்ணிலா அதோவின் மனைவி மற்றும் தம்பனையில் உள்ள வேடுவ சமூகத்தில் உள்ள பலருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வேடுவ தலைவர் உரு வாரிகே வண்ணிலா அதோ கூறியுள்ளார்.
தம்பனை பகுதியில் வேடுவ சமூகத்தினர் மத்தியில் நடத்தப்பட்ட விரைவான என்டிஜென் சோதனைகளில் 44 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.