நிச்சயமாக 800 திரைப்படம் வெளிவரும் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!
800 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும் என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் பெருந்தொற்று காரணமாக திரைப்படத்தின் பணிகள் ஸ்தம்பித்திருப்பதாகவும் பெருந்தொற்று நிலைமை நீங்கியதும் நிச்சயமாக படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்திலிருந்து விலகுமாறு தாம் விஜய் சேதுபதிக்கு கூறியதாகவும் ஏனென்றால் அவருக்கு அழுத்தங்கள் அதிகரிக்கவும் அவ்வாறு அறிவுறுத்தியதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.