அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்!
நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பார்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், தமது டுவிட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதர உரிமைகள்,
கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் மக்கள் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தும் விடயங்களில், அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டங்கள் உதவுகின்றன.
கொவிட் பரவல் தடுப்புக்காக அமுலாக்கப்படுகின்ற நடவடிக்கைகள், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு சட்டவிதிகளுக்கு அப்பால் செல்லக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.