கையடக்க தொலைபேசிகள், மின்சார பொருட்கள் இறக்குமதிக்கு தடை?
அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் இப்போது கவனம் செலுத்துகிறது.
இதன்படி ,கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின் சாதனங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற பல பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டின் அந்நிய செலாவணி இருப்புக்கள் வலுப்பெறும் வரை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வரை நாட்டில் மாற்று விகிதத்தை வைத்திருப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும் , இருப்புக்கள் வலுப்பெற்றவுடன் வரம்புகள் தளர்த்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.