நாச்சிக்குடாவில் அரியவகை மீனைப் பிடித்த மூவர் கைது!

அரியவகை மீனைப் பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸார் மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை கிளிநொச்சி, நாச்சிக்குடாக் கடல் பகுதியில் வலையைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

இந்த அரியவகை மீனைப் பார்வையிட நாச்சிக்குடா கடற்கரைக்குப் பலர் சென்றிருந்தனர்.

இந்தநிலையில், அரியவகை மீனைப் பிடித்தமைக்காக மூவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த மீன்பிடிப் சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *