தோல்வியில் உலக சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட் அணி!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2 வது போட்டியிலும் இங்கிலாந்து 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
அத்துடன், 50 ஓவர் கொண்ட ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றிக்கொண்டது.
இந்தத் தோல்வி மூலமாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் அகராதியில் விரும்பத்தகாத சரித்திரத்திற்குள் உள்வாங்கப்பட்டது.
இதுவரைக்குமான ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் தழுவிய அணியாக இந்திய அணி காணப்பட்டது..
இந்திய கிரிக்கெட் அணி 993 போட்டிகளில் பங்கெடுத்து 427 தோல்விகளை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று 860 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை அணி 428 வது தோல்வியை பெற்றுக்கொண்டு, இந்தியாவின் உலக சாதனையை முறியடித்தது .
நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணிக்கு தனன்ஜய டீ சில்வா 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய் , ஜோ ரூட் , மோர்கன் ஆகியோர் அரைச்சதமடித்து அசத்த 43 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து போட்டியில் இலகு வெற்றி பெற்றது.