அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் டிப்பர் வாகன சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாகவே இன்று மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கின்றது.