தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமாக இருக்கக்கூடிய கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை இந்த மாவட்டங்கள் அனைத்தும் வகை-1 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *