தெமடகொட தொற்றாளர்களால் மேல் மாகாணம் முழுதும் பரவும் அபாயம்!

கொழும்பு தெமடகொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

ஆகவே பயணக் கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்ட பகுதி சனநெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும்.

இதன்படி ,அங்குள்ளவர்களில் அதிகமானோர் சுத்திகரிப்பு பணியாளர்களாக இருக்கின்றனர்.

அந்நிலையில் ,இந்த வைரஸ் திரிபு நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

மேலும் ,குறிப்பாக மேல் மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *