இலங்கையில் மருத்துவர்களாக செயல்படும் அரசியல்வாதிகள்!
இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் நோயாளிகளே தங்களுக்குத் தேவையான மருந்துகள் பற்றி தீர்மானிக்கக்கூடிய நாடாக மாறியுள்ளது.
ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு தேவையில்லை என நோயாளிகளிடம் கையொப்பங்களை பெற்றுக்கொண்டது நீதியானதல்ல.
நோயாளிக்கான தடுப்பூசி மருந்தளவை நோயாளிகள் தீர்மானிக்க முடியாது – அதனை மருத்துவர்களே தீர்மானிக்க வேண்டும்