முஸ்லிம்களிடையே உயரும் கொரோனா மரணங்கள்!
நேற்று சனிக்கிழமை (29.05.2021) 21 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 20 முஸ்லிம் ஜனாஸாக்களும், ஒரு பௌத்த கொரோனா மரணமும் அடங்குவதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் தெரிவித்துள்ளார்.
இதன்படி,
சுமார் 322 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் நேற்று வரையும் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.