இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா!
இன்றைய தினம் இதுவரை 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 106,484 ஆக அதிகரிக்கின்றது.
இலங்கையில் கொரோனா ஆரம்பத்தில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட தினமாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனவே,
மக்கள் மிக அவதானமாகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.