ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிவழி!

மே தின நிகழ்வுகளை தனியாக நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மே தின பேரணியில் பங்குகொள்ளுவதற்கு அழைக்கப்படுவார்கள். அதற்கான அழைப்பு அட்டைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்விலும் சு.கவின் பிரதிநிதி பங்கேற்பார்.” – என்றார் தயாசிறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *