இம்ரான்கானின் பாலியல் சர்ச்சைப் பேச்சால் முன்னாள் மனைவிகள் எதிர்ப்பு!

பெண்கள் ஆடைக்‍குறைப்பு செய்வதே பாலியல் குற்றங்களுக்‍குக் முதல் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த கருத்துக்கு அவரது முன்னாள் மனைவிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் பாலியல் அத்துமீறல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்ற பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது உலகளவில் பேசுபொருளாகியது. ஆண்கள் சபலப்படுவதை தடுக்க பெண்கள் உடல்பாகங்களை மூடி மறைக்கிற விதத்தில் உடை அணிய வேண்டும். பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு பெண்கள் குறைவான ஆடைகள் அணிந்து உடல் அழகை வெளிக்காட்டுவதே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒரு பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இம்ரான்கான் பாலியல் பலாத்கார மன்னிப்பாளராக உள்ளார் என பாலியல் சர்ச்சை கருத்துக்கு உலகளாவிய மகளிர் உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது முன்னாள் மனைவிகளும் இம்ரான்கானின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குற்றங்களில் ஈடுபடும் ஆண்களே குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என பிரிட்டனில் வசிக்கும் அவரது முன்னாள் மனைவிகள் ஜெனிமா கான் மற்றும் ரேஹம் கான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *