இலங்கையில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாககூடும்!
புதிய கொரோனா கொத்தணிகள் உருவாககூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 100க்கும் அதிகமான நோயாளர்கள் நாள்தோறும் இனம் காணப்படுவதால் புதிய கொத்தணிக்கான ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும் முகக்கவசத்தை அணியவேண்டும் சமூக விலக்கலை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீனாவின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு போதுமான தரவுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.