நாளை மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம்!

மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்காக நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதேபோல், மேல் மாகாணத்தில் அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 5, 11 மற்றும் 13 ஆகிய வகுப்புக்கள் மாத்திரம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

ஏனைய அனைத்து தர மாணவர்களுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் மேல் மாகாணத்தின் அனைத்து பாடாசலையும் கல்வி நடவடிக்கைகாக நாளைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *