இலங்கையில் புர்காவுக்கு விரைவில் தடை!
இலங்கையில் புர்கா அணிவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்று இதை குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல்களை இனம் கண்டு அவற்றை தடுக்கும் பொருட்டு அதன் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை முழுமையாக முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கும் யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.