கடலில் மிதக்கும் 200 சவப்பெட்டிகளால் மக்கள் அச்சத்தில்!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/02/FB_IMG_1614350794768.jpg?resize=720%2C540&ssl=1)
இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள ஒரு கல்லறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200 க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் கடலில் விழுந்துள்ளன. கல்லறையின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் கல்லறைகள் கடலில் விழுந்தன.
கடலில் மிதக்கும் சவப்பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கல்லறைக்கு அருகிலுள்ள இரண்டு தேவாலயங்களும் இடிந்து கடலில் விழுந்துள்ளன.