பிரதமர் கூறியதன் அர்த்தம் வேறொன்றாகப் புரிகிறதென்றால் அவர்கள் வேற்றுக் கிரகத்தை சேர்ந்தவர்களே!
கொரோனா சடலங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ கூறிய விடயம் பொதுஜன பெரமுனவினரைத் தவிர ஏனைய அனைவருக்கும் ஒரே அர்தத்திலேயே புரிந்துள்ளது.
பொதுஜன பெரமுனவினருக்கு மாத்திரம் அதன் அர்த்தம் வேறொன்றாகப் புரிகிறது என்றால் அவர்கள் வேற்றுக் கிரகத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும்.
அத்தோடு பிரதமராயினும் தீர்மானமொன்றை எடுப்பதில் எவ்வகையான சிக்கல் காணப்படுகிறது , அவருக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்றார்.