ஆணுறை பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு!
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், பிறப்பு கட்டுப்பாட்டு விரும்பும் தம்பதியரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண் டிய பொருள் ஆணுறை.
30 வருடங்களுக்கு முன்பு வரை இது குறித்து பேச தயங்கிய மக்கள் தற்போது இயல்பாக கடைகளில் வாங்கி செல்வது அதிகரித்துவருகிறது. அதிலும் எய்ட்ஸ் நோய் வந்த போது இது பாதுகாப்பற்ற உறவின் மூலம் பரவுகிறது என்பதால் கண்டிப்பாக உடல் உறவின் போது இதை பயன்படுத்துங்கள் என்று அரசாங்கமே மக்களிடம் விழிப்புணர்வை உண்டு செய்தது.
இன்று வரை ஆணுறை என்பது உண்டு என அனைவரும் அறிந்திருந்தாலும் இது குறித்து போதுமான விழிப்புணர்வை கொண்டிருக்கவில்லை என்றே சொல்லலாம். ஆண், பெண் இருவருமே ஆணுறை குறித்த விஷயங்களை தெரிந்துவைத்துகொள்வது ஆரோக்கியமான இல்லற வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் நாப்கின்கள் மூலமாக எவ்விதமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும், அதனால் பிறப்புறுப்பில் ஏற்படும் அசௌகரித்தையும், ஆணுறை பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.