காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில், காலி மாவட்டத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,
காலி மாவட்டத்திற்கு உட்பட்ட 26 பாடசாலைகளில் இருந்து குறித்த மாணவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட பிராந்திய தொற்று நோய் விசேட நிபுணர் வேனுர கே சிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று வரையான 14 நாட்களில் 38 மாணவர்கள் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *