கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்தவர் கொரோனாவுக்குப் பலி!
கொழும்பு – முகத்துவாரம் பகுதியயை சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் கொரோரா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்துவந்த குறித்த நபர், ஹோமாகமை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொவிட் நியுமோனியா காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.