புறக்கோட்டை பிரதேசத்தில் 50 பேருக்கு கொரோனா!

புறக்கோட்டை எபிடமுல்ல மெட்லிக்ஸ் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் 50 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மெட்லிக்ஸ் தோட்டத்தில் பயணத் தடை விதிக்க புறக்கோட்டை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறித்த பிரதேசத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் 140 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக புறக்கோட்டை பொது சுகாதா பரிசோதகர் அசித நாமல் ஜயசிங்க தெரிவித்தார். 

குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வௌியான நிலையில் அதில் 50 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மெட்லிக்ஸ் தோட்டத்தில் 43 குடும்பங்களை சேர்ந்த 208 பேர் வசித்து வருகின்றனர். 

தொற்றாளராக இனங்காணப்பட்ட நபர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *