பதுங்கி இருந்த துறைமுக கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு..!
கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய இரண்டு கொழும்பு துறைமுக ஊழியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி கொழும்பு துறைமுக வளாகத்தில் பதுங்கி இருந்த நிலையில் அவர்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் இவர்கள் இருவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். எனினும் இவர்கள் வீட்டில் இருந்து தப்பி துறைமுக வளாகத்தில் பதுங்கி இருந்ததாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இவர்கள் சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.