தீக்கிரையானது லயன் குடியிருப்பு! 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதி!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 13 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களின் உடமைகளும், முக்கியமான ஆவணங்களும்கூட எரிந்து சாம்பலாகியுள்ளன.